fbpx
Homeபிற செய்திகள்சிதம்பரத்தில் நவீன அரிசி ஆலை புதுப்பித்தல் பணி -வாணிப கழக நிர்வாக இயக்குனர் ஆய்வு

சிதம்பரத்தில் நவீன அரிசி ஆலை புதுப்பித்தல் பணி -வாணிப கழக நிர்வாக இயக்குனர் ஆய்வு

சிதம்பரத்தில் நவீன அரிசி ஆலையில் அரவை பகுதி மற்றும் உலர்த்தும் பகுதி புதுப்பித்தல் பணிகளும்,செறிவூட்டப்பட்ட கலவை எந்திரம் மற்றும் கருப்பு நீக்கும் எந்திரம் அமைக்கும் பணி நடந்து வரு கிறது. இந்த பணிகளை பார் வையிட்டு ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடுநுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் அண்ணாதுரை வருகை தந்தார்.

தொடர்ந்து அவர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் முன்னிலையில் அரிசி ஆலை யில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நேரில் பார் வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதன்பிறகு, வடலூர் அருகே சேராக்குப்பம் பகுதியில் அம்மா அமுதம் பல்பொருள் அங்காடியின் செயல்பா டுகள் குறித்து நிர்வாக இயக்குனர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பல்பொருள் அங்காடியில் இருப்பு நிலவரம்,தேவையான பொருட்கள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார். ஆய்வின் போது நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img