fbpx
Homeபிற செய்திகள்திருவண்ணாமலையில் உயர்வுக்கு படி வழிகாட்டி நிகழ்ச்சி

திருவண்ணாமலையில் உயர்வுக்கு படி வழிகாட்டி நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் (11.09.2024) கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி என்ற வழிகாட்டி நிகழ்ச்சியில் உயர்கல்வி பயிலுவதற்கான அவசியம் குறித்து மாணவ, மாணவியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

தமிழக முதல்வரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி என்ற நிகழ்ச்சி மூலம் 12ம் வகுப்பு தோல்வியுற்ற அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் உயர்வுக்கு படி சிறப்பு முகாம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது.

இதனைத்தொடர்ந்து 

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மற்றும் நிகழ் கல்வியாண்டில் கல்லூரிக்கு விண்ணப்பிக்காத 12ம் வகுப்பு தேர்வெழுதிய, எழுதாத, இடைநின்ற மற்றும் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற, பெறாத மாணவர்களுக்கு தகுந்த உயர்கல்வி ஆலோசனை வழங்கி உயர்கல்வி (அ) திறன் மேம்பாட்டு பயிற்சியில் 100 சதவீதம் சேர்க்கையை உறுதி செய்யும் பொருட்டு உயர்வுக்கு படி என்ற நிகழ்ச்சி திருவண்ணாமலை, செய்யாறு மற்றும் ஆரணி கோட்டங்களில் நடைபெறவுள்ளது.

திருவண்ணாமலை கோட்டத்தில் (11.09.2024) மற்றும் 21.09.2024 ஆகிய நாள்களில் திருவண்ணாமலை, கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி, செய்யாறு கோட்டத்தில் 14.09.2024 மற்றும் 25.09.2024 ஆகிய நாள்களில் செய்யாறு அரசு  மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆரணி கோட்டத்தில் 18.09.2024 மற்றும் 27.09.2024 ஆகிய நாள்களில் ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதனைத்தொடர்ந்து, உயர்வுக்கு படி என்ற வழிகாட்டி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  பேசியதாவது:

மாணவர்களாகிய நீங்கள் பணி செய்கின்ற பொழுது பட்டமும் பட்டயமும் வழங்கப்படுகிறது. மேலும் முன்னனி நிறுவனங்கள் பயிற்சி வழங்குகின்ற பொழுது திறன்பயிற்சி பெறும் கால கட்டங்களில் ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  சுவாமி முத்தழகன், உதவி இயக்குநர் (பொ) மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் தியாகராஜன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் (பொ)  சரணியா, கல்லூரி முதல்வர் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

படிக்க வேண்டும்

spot_img