கோவை அவிநாசி ரோட்டில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் “கோ க்ளாம்“ என்ற பெயரில் அனைத்து மாநில கைவினைப் பொருட்கள் கண்காட்சி விற்பனை இன்று (12 -ந் தேதி)தொடங்கியது.
வருகிற 14-ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் அனைத்து மாநில கைவினைஞர்களின் கைவினைப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன என்று அதன் ஒருங்கிணைப்பாளர்கள் ஹுனா, ராகுல் தெரிவித்துள்ளனர்.