கோவை, துடியலூர் அருகே வட்டமலைபாளையத்திலுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் 28 ஆம் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது..
இவ்விழாவில் மெக்கானிக்கல் துறை தலைவர் சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர். டாக்டர் உமா ஆண்டறிக்கை வாசித்தார். எஸ்.என்ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிறுவனங்ளின் இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் நிகழ்ச்சியில் தலைமையுரையாற்றினார்.
சிறப்பு விருத்தினராக கோவை, அசோசியேஷன் ஆப் கன்சல்டிங் சிவில் இன்ஜினியர் (இந்தியா)அமைப்பின் தலைவர் டாக்டர் கி.சுதாகர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் பேசும்போது கல்வியின் மூலமே ஒருவர் உயர்நிலையை அடைய முடியும். விடா முயற்சி, கடின உழைப்பு, தொடர்ந்து ஆர்வத்துடன் செயல்படுவது, யாரையும் சார்ந்து வாழாமல் தன்னம் பிக்கையோடு எதனையும் எதிர் கொள்ள்ளும் போது தான் சிறந்த வெற்றியாளராக திகழ முடியும்
என்றார்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் கல்லூரியின் சிறந்த மாணவியாக எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் துறை மாணவி சண்முகி தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
மேலும் ஒவ்வொரு துறையிலும் முதலிடம் பெற்ற மாணவர்களில் கட்டிடவியல் துறையில் எஸ்.நரேன் மெக் கானிக்கல் துறை பிரிவு ஏ மற்றும் பிரிவு பி ஆகியவற்றில் எம்.கௌதம் மற்றும் ஆர்.எஸ் விக்னேஷ் சாரதி ஆகியோருக்கும், ஆட்டோ மொபைல் துறையில் ஆர்.திவ்யேஷ், எலக்ட்ரிக்கல் – எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஆர்.சஞ்சய், கணிப்பொறி துறையில் ஜே.லிப்னின் டேனிஷ் ஆகியோருக்கு பரிசுத் தொகையுடன், கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
பின்னர் மாலையில் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்கள் பணியாளர்கள், மாணவ மாணவியர் திரளாக கலந்து கொண்டனர். விழாவின் இறுதியாக கட்டிடவியல்துறை தலைவர் கே.நிவேதிதா நன்றி கூறினார்.