fbpx
Homeபிற செய்திகள்முறையான நடன நிகழ்ச்சிக்கு அனுமதி தரவேண்டும்: கோவை ஆட்சியரிடம் மனு

முறையான நடன நிகழ்ச்சிக்கு அனுமதி தரவேண்டும்: கோவை ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டத்தில் சுமார் 500- க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் குடும் பத்துடன் வசித்து வருகின்றனர். மேலும் இவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புரட்சித்தலைவர் எம்ஜி ஆர், கேப்டன் விஜய காந்த், எம்.ஆர் ராதா போல் வேடமடைந்து நடனமாடி நூதனமுனை முறையில் கோவை மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளிக்க வந்தனர்.
பின்னர் செய்தியாளர் களை சந்தித்து பேசிய நடன கலைஞர்கள் கூறிய தாவது:

40 ஆண்டுகளுக்கு மேலாக கோவில் திருவிழாக் கள் முறையான நடன நிகழ்ச்சி நடத்தி கலாச்சார சீரழிவு இல்லாமல் கண் ணியத்துடனும் நடன நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையான நடன கலைஞர்களுக்கு பல நிபந்தனைகளை விதித்து ஒரு தீர்ப்பும் வழங்கியுள்ளது.

தமிழகத்தில் முன் னாள் காவல் தலைவர் சைலேந்திரபாபு அவர்களின் உத்தரவுப்படி கோவில் திருவிழாக்களில் ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் பாயும் என்று உத்தரவிட்டுள்ளார்.


நாங்கள் முறையான நிகழ்ச்சிகளை கோவில் திருவிழாக்கில் கோவை மாவட்டம் முழுவதும் நடத்தி வருகிறோம். இந்நிலையில் எங்கள் நடனத்துறைக்கும் கலைஞர்களுக்கும் சம்பந்த மில்லாத ஒரு சிலர் கோவை மாவட்டத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேரூர் காளம்பாளையத்தை சேர்ந்த ஜெயந்தி ஆனந்தன் கருமத்தம்பட்டியை சேர்ந்த தனபால் என்பவர் இருவரும் கோவில் திரு விழாக்களில் கோவை மற்றும் தமிழகத்தில் உள்ள பல இடங்களில் மேடையிலே நம் கலாச்சார சீர் கேடு ஏற்படும் வகையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி ஆபாச நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

இவர்களைப் போன்றவர்களால் எங்களைப் போன்ற முறையான நடன கலைஞர்களுக்கு அவபெயர் ஏற்பட்டு வருகிறது எங்கள் வாழ்வாதாரமும் சீரழிந்து வருகிறது.
எனவே இவர்கள் மீது உயர்நீதிமன்ற அவமதிப்பு வழக்கம் கைது நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img