fbpx
Homeபிற செய்திகள்‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் 52,418 பேருக்கு முதன் முறை சிகிச்சை - 1,35,987...

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் 52,418 பேருக்கு முதன் முறை சிகிச்சை – 1,35,987 பேருக்கு தொடர் சிகிச்சை

நீலகிரி மாவட்டத்தில் தமிழக அரசின் முதன்மைத் திட்டமான ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் இதுவரை முதன்முறை சேவையாக 52,418 பேரும், தொடர் சேவையில் 1,35,987 பேரும் பயன்பெற்று வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் அருவங்காடு பகுதியில், தமிழக அரசின் முதன்மை திட்டமான மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் நேற்று (நவ.25) செய்தியாளருடன் சென்று, மருந்து பெட்டகம் பெற்றுவரும் பயனாளிகளுடன் கலந்துரையாடி நலம் விசாரித்தார். மருந்துகளை சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:தமிழக அரசின் முதன்மை திட்டமான ‘மக்களைத் தேடி மருத்துவம்’ நீலகிரி மாவட்டத்தில் 6-.-8-.2021 அன்று துவக்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் தொற்றா நோய்களினால் ஏற்படும் நோய் பாதிப்பை எதிர்கொள்ளும் விதமாக மக்களைத் தேடி மருத்துவம் வடிவமைக்கப்பட்டு, களப்பணியாளர்கள் மூலம் பயனாளிகளின் இல்லங்களுக்கே சென்று சுகாதார சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தில் கள அளவிலான குழுவில் நீலகிரி மாவட்டத்தில் 218 பெண் சுகாதார தன்னார்வலர்கள், 5 நோய் ஆதரவு செவிலியர் மற்றும் 5 இயன்முறை மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர்.

128 இடைநிலை சுகாதார சேவையாளர்கள் மற்றும் 61 பல்நோக்கு சுகாதார ஆய்வாளர்கள் மூலம் வழங்கப்படும் அனைத்து தொற்றா நோய்க்கான சேவைகளும் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையான 7,29,576-ல் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5,53,019 ஆவர். இதில் தொற்றா நோய்களுக்கான பரிசோதனை பெற்றவர்கள் 4,95,213, உயர் ரத்த அழுத்த நோய் கண்டறியப்பட்டு மருந்து பெட்டகம் பெற்றவர்கள் 21,143, நீரிழிவு நோய் நோயாளிகள் கண்டறியப்பட்டு மருந்து பெட்டகம் பெற்றவர்கள் 6,113 மற்றும் 6,137 பயனாளிகள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் கண்டறியப்பட்டு மருந்து பெட்டகங்களையும் இத்திட்டத்தின் மூலம் பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு பயனாளியும் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் மக்கள் நலப்பதிவில் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இத்திட்டம் துவங்கப்பட்டு இன்று வரை உயர் ரத்த அழுத்த நோய் சிகிச்சைக்காக 27,792 நபர்களும், நீரிழிவு நோய்க்காக 10.025 நபர்களும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்காக 9,414 நபர்களும், நோய் ஆதரவு சிகிச்சை 2,657 நபர்களும், இயன்முறை சிகிச்சை 2,424 நபர்களும், வாய் புற்று நோய் சிகிச்சை 10 நபர்களும், மார்பக புற்றுநோய் சிகிச்சை 74 நபர்களும், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சை 22 நபர்கள் என மொத்தம் 52,418 நபர்கள் முதன்முறையாக சேவை பெற்றுள்ளனர். இதைத் தவிர தொடர் சேவையாக 1,35,987 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் மரு.பாலுசாமி உட்பட பலர் உடன் சென்றனர்.

“வயதானவர்களுக்கு
நல்ல பாதுகாப்பு”

பயனாளி கேசவன் (வயது 87). எனக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது. இதற்காக நான் தொடர்ந்து மாத்திரை எடுத்து வருகிறேன். முன்பெல்லாம் ஒரு மாதத்திற்கு ஒரு முறை ஆரம்பசுகாதார நிலையத்திற்கு சென்று தேவையான மருந்து மாத்திரைகளை வாங்கி வருவேன்.

சில நேரங்களில் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டேன். தற்போது ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் எனக்கு தேவையான மருந்துகளை வீட்டிற்கே வந்து தருகின்றனர்.

எனக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எங்களைப் போன்ற வயதானவர்களுக்கு இது போன்ற திட்டத்தினை துவக்கிவைத்து சிறப்பாக செயல்படுத்தி வரும் முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

“களப்பணியாளர்களால்
உடல் நலம் தேறுகிறேன்”

பயனாளி ஆறுமுகம் (வயது 65)அருவங்காடு எம்.ஜி.காலனி பகுதியில் வசிக்கிறேன். எனக்கு 3 வருடமாக உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளது. தொடர்ந்து மருந்து மாத்திரை சாப்பிடுகிறேன். ஒவ்வொரு முறையும் ஆரம்பசுகாதார நிலையத்திற்கு சென்று பரிசோதனை செய்து மருந்து வாங்கி வருகிறேன்.

சில நேரங்களில் மாத்திரை வாங்கப் போக இயலாத காரணத்தினால் தொடர்ந்து சாப்பிட முடியாமல் போனதும் உண்டு. தற்போது முதல்வர் அறிவித்த ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் களப்பணியாளர்கள் வீட்டிற்கே கொண்டு வந்து மருந்துகளை தருகின்றனர்.

இதனால் சரியான முறையில் மாத்திரைகள் உட்கொண்டு தற்போது நலமுடன் இருக்கிறேன். இதற் காக முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றி என்றார்.

தொகுப்பு:
நி.சையத் முகம்மத்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
இரா.சரண்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
நீலகிரி மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img