fbpx
Homeபிற செய்திகள்ஊட்டி ஜெ.எஸ்.எஸ் கல்லூரியில் 62வது மருந்தாக்கியல் வார விழா

ஊட்டி ஜெ.எஸ்.எஸ் கல்லூரியில் 62வது மருந்தாக்கியல் வார விழா

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியில் ஒரு வார 62வது மருந்தாக்கியல் வார விழா கோலகலமாக தொடங்கியது. விழாவை கல்லூரி முதல்வர் எஸ்.பி.தனபால், மைசூரு ஜெ.எஸ்.எஸ் பல்கலைக்கழக தேர்வு துறை துணை கண்ட் ரோலர் முனைவர் நாகேந் திரபிரசாத் உள்ளிட்ட சிறப்பு அழைப்பார்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

கல்லூரி முதல்வர் எஸ்.பி.தனபால் வரவேற் புரையாற்றினர். இந்த விழாவில் ஜெ.எஸ்.எஸ் பல்கலைகழக டீன் முனைவர் விசால்குமார் குப்தா தலைமை உரையாற்றினார்.

மத்திய அமெரிக்க நாடான கேமருனை சேர்ந்த ஆராய்ச்சியாளர் முனைவர் கோபா கவா தியோடரா, பேராசிரியர் முனைவர் அஸ்வினி, ஓசூர் விங்கா பார்மா நிர்வாக இயக்குநரும் ஊட்டி ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரி முன்னாள் மாணவருமான ஜெயபிரகாஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஊட்டி ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரி முதன்மை அலுவலர் பச வலிங்கதேவரு,நீலகிரி பாராமெடிக்கல் சங்க தலைவர் முனைவர் வடி வேலன், துணை தலைவர் முனைவர் ஜவகர், பொது செயலாளர் முனைவர் கணேஷ், பொருளாளர் முனைவர் காளிராஜன் ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.
பேராசிரியர்கள் ,மாணவ. மாணவிகள் இணைந்து சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

துணை முதல்வர் முனைவர் கே.பி.அருண் நன்றி கூறினார்.
ஒரு வாரம் நடை பெறும் விழாவில் மாணவ மாணவிகளின் தனித்திறமைகளை வெளி கொணரும் வகையில் ஆரோக்கிய சமையல் போட்டி, கோலபோட்டி, ஓவியபோட்டி, நடன போட்டி மற்றும் கண்கவர் கலைநிகழ்வுகள் நடைபெறும்.

படிக்க வேண்டும்

spot_img