fbpx
Homeபிற செய்திகள்நியாயவிலைக் கடைகளில் நீலகிரி ஆட்சியர் திடீர் ஆய்வு

நியாயவிலைக் கடைகளில் நீலகிரி ஆட்சியர் திடீர் ஆய்வு

நீலகிரி மாவட்டம் உதகை நொண்டிமேடு, பாம்பே கேசில் பகுதி யில் உள்ள கூட்டுறவு நிறுவனம் நியாய விலைக்கடைகளில், மாவட்ட ஆட் சியர் சா.ப.அம்ரித் திடீர் ஆய்வு மேற் கொண்டார்.

பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் முக்கிய பங்காற்றி வரும் பொது விநியோகத் திட்டத்தினை வலுப்படுத்துவதின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு நேரடியாக உதவ முடியும் என்பதின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது.

மாவட்ட ஆட்சியர் உதகை நொண்டி மேடு மற்றும் பாம்பே கேசில் பகுதியில் உள்ள கூட்டுறவு பண்டகசாலை மற்றும் நியாய விலைக்கடையில் விற்பனை முனைய இயந்திரத்தில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, மீதமுள்ள அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, ராகி, பாமாயில், பொருட்கள் இருப்பு மற்றும் பொருட்களின் தரம், எடை அளவு ஆகியவற்றினை பார்வையிட்டு, அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியல் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா என்பதனை யும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, உதகை வட்டாட்சியர் ராஜசேகர், நியாயவிலைக்கடை பணியா ளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img