தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான மாணவர் தொழில்நுட்ப கருத்தரங்கு (அத்வைதா 2025), கோவையில் உள்ள அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கருத்தரங்கை இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.
தொடக்க உரையில், டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, “ஈடுபாடு, புதுமை மற்றும் குழுப்பணி” என்பது எந்தவொரு நிறுவனமும் சிறந்த நிறுவனமாக மாறுவதற்கான மந்திரம் என்று கூறினார்.
டாக்டர் அண்ணாதுரை, விண்வெளி ஆராய்ச்சித் துறையில் அவசி யமான அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாடு குறித்த உண்மையான கண்ணோட்டத்தை மாணவர்களுக்கு வழங்கும் வகையில், தனது ஆரம்ப கால வாழ்க்கையிலிருந்து இஸ்ரோ வில் தாக்கத்தை ஏற்படுத்தியவாழ்க்கை வரையிலான தனது தொழில்முறை பயணம் குறித்த தனிப்பட்ட நுண்ணறிவுகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்விற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் வி.பாரதி ஹரிசங்கர் தலைமை தாங்கினார். தனது தலைமை உரையில், தலைமை விருந்தினரான டாக்டர் மயில்சாமி அண்ணாதுரையின் குறிப்பிடத்தக்க சாதனைகள், அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியைப் பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத போட்டிகள், அறிவுப் பகிர்வு அமர்வுகள் மற்றும் ஈடுபாடு கொண்ட சவால்கள் ஆகியவை இடம்பெற்றன, இது மாணவர்களுக்கு புதுமை, திறமை மற்றும் திறன்களை வெளிப்படுத்த ஒரு சக்தி வாய்ந்த தளத்தை வழங்கியது.



