fbpx
Homeபிற செய்திகள்கோவையில் 1000 பேருக்கு பிரியாணி வழங்கி கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்: சிலைக்கு மாலை அணிவித்து நா.நார்த்திக்...

கோவையில் 1000 பேருக்கு பிரியாணி வழங்கி கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்: சிலைக்கு மாலை அணிவித்து நா.நார்த்திக் மரியாதை

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழா கோவை காந்திபுரம் பகுதி திமுக சார்பில் 67 வது வார்டு விவேகானந்தா சாலை, சாஸ்திரி சாலை சந்திப்பில் கொண்டாடப்பட்டது.


இதில் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) கலந்து கொண்டு, கலைஞர் கருணாநிதி திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


பின்னர் பொதுமக்கள் 1000 பேருக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்வில், திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் வழக்கறிஞர் கே.எம்.தண்டபாணி, காந்திபுரம் பகுதி திமுக செயலாளர் ஆர்.எம்.சேதுராமன், 67 வது வட்ட செயலாளர் கே.ராமநாதன், மாமன்ற உறுப்பினர் வித்யா ராமநாதன், மாநகர் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் டெம்போ சிவா, அயலக அணி காட்டூர் ராஜ்குமார், சீனிவாசன், சரவணன், முருகதாஸ், மணி, முரளி, பிரின்ஸ், மோகன் பிரசாத், மஞ்சுப் பிரியா, சரவணன், ராமமூர்த்தி, சுப்புராஜ், மணி, செல்வகுமார், முருகேசன், தீபக் சக்தி, ராஜன், தொண்டரணி கணேசன், ரத்னவேல், பெருமாள், ராஜா, கிருஷ்ணராஜ், ரபீக், கண்ணம்மா, சமீன்பானு, சௌரமா, பாக்யா, லட்சுமி, பிரியா, ராஜேஸ்வரி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img