ஹிந்துஜா குழுமத்தின் ஓர் அங்கமாக திகழும், இந்தியாவை சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி நிறுவிய மைன்ட்மேஸ், நரம்பியல் தொழில்நுட்பத்தில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதில், அமெரிக்கா மற்றும் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. புதுடில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை உட்பட நாடு முழுவதும் 12-க்கும் மேற்பட்ட மருத்துவ நிறுவனங்களில் செயல் பாடுகளைக் கொண்டுள்ளது மைன்ட் மேஸ் இந்தியா.
அமெரிக்கா சந்தையில், வைப்ரா ஹெல்த்கேர் நிறுவனத்துடன் இணைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்குப்பின் நோயாளிகளை கவனிப்பதில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
மைன்ட்மேஸ் டிஜிட்டல் ஹெல்த் தொழில்நுட்ப தளங்கள் (மைன்ட்போட் மற்றும் மைன்ட்மோஷன்கோ) கிளினிக் மற்றும் வீடுகளில் வைப்ரா மருத்து வமனைகளின் நோயாளிகளை கவ னிக்கிறது.
வைப்ரா ஹெல்த்கேர் அமெரிக்காவில் 19 மாகாணங்களில் 90 சிறப்பு மருத்துவமனைகளில் மாற்றுவகை மருத்துவ கவனிப்பு மற்றும் வசதி களை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 1 கோடி அமெரிக்கர்கள், நரம்பியல் தொடர்பான நோய்களால் பாதிக்கப் பட்டோர் பயனடைந்து வருகின்றனர்.
மைன்ட்மேஸ் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டாக்டர் தேஜ் டாடி கூறியதாவது:
மிகவும் தீவிரமான நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக ளுக்கு, தொடர்ந்து அவர்களை கவனித்து குணமடையச் செய்ய மைன்ட்மேஸ், நிருபிக்கப்பட்ட தீர்வுகளை அளித்துள்ளது. மிகவும் சக்திவாய்ந்த, டிஜிட்டலில் பயன்படும் வகையில் அதிநவீன தொழில்நுட்ப கருவிகளை அளிப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறோம். நோயாளிகள், அவரது குடும்பத்தினர் எளிதாக பயன்படுத்தம் வகையில், தீர்வுகளை அளிக்கிறோம்.
வைப்ராவை பொறுத்தவரை உலத்தரம் வாய்ந்த பங்குதாராகவும், நம்பகத்தன்மை மிக்கவகையில், நோயாளிகளின் மூளை நலனின் மாற்றம் தந்து, மேம்படும் வகையில் தீர்வுகளை அளித்து வருகிறோம். மைன்ட்மேஸ், உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் நரம்பு வியாதிகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தொடர்ந்து கண்காணித்து மேம்படுத்திக் கொள்ள தொழில்நுட்ப ரீதியான திறனை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது,” என்றார்.
மைன்ட்மேஸ், பக்கவாதம்/ தீவிர மூளைக்காயம், முதுகு தண்டுவடங்களில் ஏற்படும் காயம், பார்க்கின்சன் நோய்கள் போன்றவற்றிக்கு மென் பொருள்களை பயன்படுத்தி அவற்றை மதிப்பீடு செய்து தீர்வுகளை அளிக் கிறது.