கே.பி.ஆர்.கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி தமிழ்த்துறை சார்பில், “இளைஞர்களுக்குத் தேவை அறிவின் பெருக்கமே..! உறவின் நெருக்கமே..!” எனும் தலைப்பில் புத்தாண்டு சிறப்பு பட்டிமன்றம் நடை பெற்றது. தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ப.கோகுல்நாத் வரவேற்றார்.
கல்லூரி முதல்வர் முனைவர் ப.கீதா தலைமை தாங்கி பேசினார்.
கல்லூரி செயலர் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் செ.பாலுசாமி, தலைவர் தமிழ்த்துறை முனைவர் ப.முத்துக்குமாரவடிவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரி நூலகர், எழுத்தாளர் சி. பரமசிவம் பட்டிமன்ற நடுவராக பணியாற்றினார்.நிகழ்வு இரு அணிகளாக அமைக்கப்பட்டு நடைபெற் றது.
காலத்தே பயிர் செய்
இளைஞர்களுக்குத் தேவை அறிவின் பெருக்கமே..! என்ற அணியில் 3-ம் ஆண்டு மாணவி காவ்யா.சோ., முதலாண்டு மாணவி தன்யா.சி, மாணவர் யோகேஸ்குமார் ஆகியோரும், இளைஞர்கள் வளர்ச்சிக்குத் தேவை அறிவு பெருக்கமே அதாவது நம்மை நமக்கு யார் என்று வெளிக்காட்டவும், காலத்தே பயிர் செய் எனும் நோக்கில் சங்கப்புலவர் வாழ்க்கை வரலாற்றுக் கதைகளோடு பெரிதும் உறுதுணையாவது அறிவின் பெருக்கமே என்று வாதிட்டனர்.
உறவின் நெருக்கமே அணியில் இரண்டாம் ஆண்டு மாணவி நிரஞ்சனி.ரா., முதலாண்டு மாணவி மைதிலிதேவி.ஈ, இரண்டாம் ஆண்டு அனுகீர்த்தனா.பி. ஆகியோர் மனிதன் தன் வாழ்க்கையில் வெற்றி பெற அறிவு மட்டும் போதாது பெற்ற வெற்றியினைக் கொண்டாட உறவுகள் இருந்தால் தான் சிறப்பு அதுவே நம் வெற்றிக்கான பாலம் என்று கருத்துகளை முன் வைத்தனர்.
“இளைஞர்களுக்குத் தேவை உறவின் நெருக்கமே” என்று நடுவர் தீர்ப்பு வழங்கினார்.முதலாம் ஆண்டு வணிகவியல் துறை ர.பூரணா தொகுத்து வழங்கினார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் வெ.அர.தாரணி ஒருங்கிணைத்தார்.