கடந்த 1999ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக, அதன் வெள்ளி விழா கோயமுத்தூர் ரோட்டரி கிளப் மில்லினியம் சார்பாக கோவை எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடந்தது. அமைப்புத் தலைவர் சுனில் தலைமை வகித்தார். சங்கத் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் மனோஜ் ஜெயராம் ஆகியோர் முன்னிலை வசித்தனர்.
கவுரவ அழைப்பாளராக ரோட்டரி 3201 மாவட்ட ஆளுநரும், மூத்த வழக்கறிஞருமான சுந்தர வடிவேலு பங்கேற்று, ஆசிய நாடுகளில் சோழர் கால தமிழர்களின் போர் முறைகளின் சிறப்புகள் குறித்து பேசினார்.
சிறப்பு விருந்தினராக இந்திய ஐ.என்.எஸ் அக்ரானியின் கமாண்டர் அமித்குமார் சர்மா பங்கேற்று, இந்திய ராணுவத்தின் போர் யுக்திகள் குறித்தும், கார்கில் போரின்போது இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்தும் விவரித்தார்.
பின்னர், ஓய்வுபெற்ற முப்படைகளை சேர்ந்த ராணுவ அதிகாரிகளுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில், கல்லூரி முதல்வர் செந்தூர்பாண்டியன், முன்னாள் ரோட்டரி நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், செபி செபாஸ்டியன், ரவிச்சந்திரன், பார்த்திபன், பழனிச்சாமி, பால்வில்லியம், ஹென்றி அமல்ராஜ், சாய் கிருஷ்ணா, சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.