fbpx
Homeபிற செய்திகள்அதிமுக ஆட்சியின் அலட்சியத்தால் தூத்துக்குடி மாநகர மக்கள் அவதி மீட்பு பணியில் களமிறங்கிய அமைச்சர் கீதாஜீவன்...

அதிமுக ஆட்சியின் அலட்சியத்தால் தூத்துக்குடி மாநகர மக்கள் அவதி மீட்பு பணியில் களமிறங்கிய அமைச்சர் கீதாஜீவன் பேட்டி

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகர் பகுதியில் உள்ள தாழ்வான சில இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதனை கருத்தில் கொண்டு பொதுமக்களின் நலன் கருதி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஒவ்வொரு பகுதியாக அதிகாரிகளுடன் சென்று மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், இந்த பகுதி களில் துரித நடவடிக்கை எடுத்து வருவது மட்டுமின்றி சில பகுதிகளுக்கு தனது சொந்த செலவில் தேவையான உபகர ணங்களை வாங்கிக் கொடுத்து, சில பகுதிகளுக்கு ஊழியர்களை நியமித்து, நடைபெறும் பணிகளை இரவு-பகல் பாராமல் செய்து வருகிறார். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிக்கும் அதிகாரி களையும், கட்சியினரையும் தொடர்பு கொண்டு அப்பகுதியில் நடைபெறும் பணிகள் என்ன நிலையில் இருக்கிறது என்பது குறித் தும் அவ்வப்போது விசாரித்து பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தூத்துக்குடி மாநக ராட்சி 6வது வார்டுக்குட்பட்ட அன்னை தெரசா மீனவர் காலனி, பாக்கியநாதன் விளை, தஸ்நேவிஸ் நகர், பொன்சுப்பையாநகர், 7வது வார்டுக்குட்பட்ட கலைஞர்நகர், லூர்தம்மாள்புரம் ஆகிய பகுதிக ளில் மழைநீர் தேங்கி இருப்ப தாக தகவல் கிடைத்தவுடன், அப்பகுதிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் நேரடியாக களமிறங்கி ஆய்வில் ஈடுபட்டு, மழைநீரை விரைவாக வெளியேற்றுவதற்கான பணிகளை முடுக்கி விட்டார். மேலும், கலைஞர்நகர் மற்றும் பாக்கியநாதன் விளை பகுதிகளில் உள்ள மழைநீரை வெளியேற்றும் மின் மோட்டார் அறையை ஆய்வு செய்தார்.
மேலும் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் உள்ளவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் செய்தியா ளர்களிடம் கூறுகையில், தூத்துக் குடி மாவட்டத்தில் நேற்று அதி காலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. தாழ் வான பகுதிகளில் மழை நீர் தேங்கி யுள்ளது. அதனை அகற்றும் பணி மாநகராட்சி நிர்வாகம் மூலமும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் வேகமாக நடைபெற்று வருகிறது.

கலைஞர் நகர், பொன் சுப்பையா நகர், அன்னை தெரசா நகர், மீனவ காலனி பகுதிகள் ஏசியன் டெவலப்மென்ட் மூலம் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலை தொடங்கும் நிலையில் உள்ளது.
அதிமுக ஆட்சியின் அலட்சிய போக்கினாலும், முறையான திட்டமிடுதல் இல்லாமல் செயல் படுத்தப்பட்ட பணி களால்; தூத்துக்குடி மக்கள் மழை காலங்களில் பெரிதும் பாதிப்பை சந்;தித்து வருகின்றனர். திமுக ஆட்சி அமைந்த பிறகு முதலமைச் சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி அனைத்து பணிகளும் திட்ட மிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தரமான பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

ஆய்வின் போது, மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், பகுதி செயலாளர் ஜெயக்குமார், கவுன் சிலர் ஜெயசீலி, பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டபிரதிநிதி பாஸ்கர் மற்றும் மணி, அல்பர்ட் உள்பட பலர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img