யூத் ஹாஸ்டல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா கொங்கு கிளை சார்பில் 38வது நிகழ்வாக சர்வதேச சமூக நீதி தினத்தை முன்னிட்டு ஈரோடு பெருமாள் மலை ஸ்ரீ மங்களகிரி பெருமாள், அரச்சலூர் ஸ்ரீ புற்றீட கொண்ட ஈஸ்வரர், அவல் பூந்துறை ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் மற்றும் திண்டல் மலை ஸ்ரீ வேலாயுத சுவாமி திருக்கோவில்களில் அரசு கலை மற்றும் அறிவியல், எழுமாத்தூர், நவரசம் கலை மற்றும் அறிவியல், மற்றும் ஈரோடு வேளாளர் மகளிர் கல்வியியல் கல்லூரிகளை சேர்ந்த என்.எஸ்.எஸ். மாணவ, மாணவியர் 320 பேர் உழவார திருப்பணி சேவையில் ஈடுபட்டனர்.
இச்சேவையில் மாவட்ட தலைவர் ஆடிட்டர் மாணிக்கம், செயலாளர் ஆர். சாரங்கபாணி, யூத் ஹாஸ்டல் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் கொங்கு கிளை தலைவரும், அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளருமான Dr. P.அய்யப்பன், யூத் ஹாஸ்டல் துணைத் தலைவர் சுகுமார் செயற்குழு உறுப்பினர்கள் ஸ்டாலின், பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை யூத் ஹாஸ்டல் கொங்கு கிளை பிரசிடெண்ட் பேராசிரியர் சந்திரா தங்கவேல்,Dr. P. அய்யப்பன் செய்தனர்.