தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாள் விழா& மாநாடு ஈரோட்டில் மிக பிர மாண்டமாக நடைபெறுகிறது என்று அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர் கூறினார்.
அவர் நேற்று ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விபரம்:
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாள் விழா & மாநாடு ஈரோட்டில் மிக பிரமாண்டமாக நடைபெறுகிறது. கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்குகிறார். கட்சியின் முன்னணி தலைவர்கள் அனை வரும் விழாவில் கலந்து கொள்கின்றனர்.
முன்னதாக பிரம்மாண்ட மான தமாகா பேரணி கொங்கு கலையரங்கத்தில் இருந்து விழா நடைபெறும் ஈரோடு திண்டல் வேளாளர் கல்லூரி வரை நடைபெறுகிறது. காமராஜர் பொது வாழ்வில் நேர்மை, தூய்மை, பணிவு போன்ற இலக்கணங்களை படைத்தவர். அவரது வழியில் ஐயா ஜி.கே.வாசன் கட்சியை வழிநடத்தி வருகிறார்.
காமராஜரின் 112 வது பிறந்தநாள் விழா வரும் நாடாளு மன்றத் தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு அச்சாரமாய் திகழும் தமாகா -அதிமுக -பாரதிய ஜனதா கட்சி அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. மேலும் பல புதிய கட்சிகள் கூட்டணிக்கு வரும் வாய்ப்புள்ளது.
இந்தியாவின் பெருமையை, வலிமையை உலகெங்கும் பறை சாற்றி உள்ள பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மாபெரும் வெற்றியை தேசிய ஜனநாயக கூட்டணி பெறும்.
எதிர்க்கட்சிகள் முதல் கூட்டம் பீகாரில் நடந்தது. அக்கூட்டத்திலேயே காங் கிரசுக்கும் திருணாமுல் காங் கிரஸ்க்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் உள்ள கருத்து வேறுபாடுகள் வெளிப்பட துவங்கின. எனவே எதிர்கட்சிகள் ஒருங்கிணைய வாய்ப்பில்லை.
தமிழகத்தின் நிலையை வைத்து இந்திய அரசியலை கணிக்க முடியாது.
பிரதமர் மோடிக்கு செல்வாக்கு உலக மெங்கும் உள்ளது அவர் மீண்டும் பிரதமராக வேண்டும் நாட்டை வலிமையாக வழி நடத்திச் செல்ல வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.
தமிழக முதலமைச்சர் தொடர்ந்து கவர்னரை விமர்சிப்பதை விடுத்து தமிழகத்தின் தலையான காவிரி பிரச்சனை, மேகதாது பிரச்சினை போன்றவைகளில் கவனம் செலுத்த வேண்டும். கர்நாடகாவில் இருந்து 23 டிஎம்சி தண்ணீரை பெற்றுத் தர வேண்டும் மேகதாது அணை கட்டப்படுவதை தடுக்க கர்நாடக அரசுடன் பேச வேண்டும் அதேபோன்று கவர்னருடன் சுமுக உறவை ஏற்படுத்தி மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும்.
கவர்னரும் தேவையின்றி அரசியல் பேசுவதை தவிர்க்க வேண்டும். தமிழக முதலமைச்சர் தூய்மையான நிர்வாகத்தை ஏற்படுத்த அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து விடுவிக்க வேண்டும் அல்லது செந்தில் பாலாஜியிடம் ராஜினாமா கோர வேண்டும்.
இதன் மூலம் அமலாக்கத்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்
பேட்டியின் போது தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி மாநில தலைவர் யுவராஜா மற்றும் முன்னணி நிர்வாகிகள் எஸ்டி சந்திரசேகர், ஆறுமுகம், விஜயகுமார், கௌதமன் உட்பட பலர் உடன் இருந்தனர்.