fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் குவிந்த 315 மனுக்கள்

ஈரோடு மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் குவிந்த 315 மனுக்கள்

ஈரோடு மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, 3 நபர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியை வழங்கினார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வீட்டுமனை, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, ஆக்கிரமிப்பு, சாலை, குடிநீர் வசதி வேண்டி, கழிவு நீர் கால்வாய் தூர்வாருதல் மற்றும் காவல்; துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 315 மனுக்கள் வரப்பெற்றன.

பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர்; பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார்.

மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர்; ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 3 நபர்;களின் வாரிசுதார்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1.00 லட்சம் வீதம் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் நிவாரண உதவிகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராம கிருஷ்ணசாமி மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img