fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு ஆகாஷ் கல்வி நிறுவன மாணவர்கள் 4 பேர் ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் வெற்றி

ஈரோடு ஆகாஷ் கல்வி நிறுவன மாணவர்கள் 4 பேர் ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் வெற்றி

ஈரோட்டைச் சேர்ந்த ஆகாஷ் கல்வி சேவைகள் லிமிடெட் (AESL) நிறுவனத்தின் நான்கு மாணவர்கள், மே 18 அன்று நடைபெற்ற உலகின் மிகக் கடினமான தேர்வுகளில் ஒன்றான (6 மணிநேரம்) ஜெஇஇ அட்வான்ஸ்டு 2025 தேர்வில் வெற்றி பெற்றனர். 15 ஆயிரம் இடங்களுக்கு சுமார் 2.5 லட்சம் பேர் ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வு எழுதினர். முன்னதாக 12.5 லட்சம் மாணவர்கள் ஜெஇஇ தேர்வு எழுதினர்.

இந்த தேர்வில் மாணவர்கள் என்.நிதின் (அகில இந்திய ரேங்க் 1125), ஜி.சுஹித் 4939, விஸ்வா 5154 மற்றும் ஆதர்ஷ் விஜய் 10140 ஆகியோர் வெற்றி பெற்றனர். மாணவர்களை வாழ்த்தி, ஆகாஷ் கல்வி சேவைகள் நிறுவன தலைமை கல்வி மற்றும் வணிகத் தலைவர் தீரஜ் மிஸ்ரா கூறியதாவது: இந்த முடிவுகள் ஆகாஷ் கல்வி சேவைகள் அதன் மாணவர்களிடம் வளர்க்கும் கல்வி மற்றும் ஒழுக்கத்தின் பிரதிபலிப்பாகும்.

எங்கள் சாதனையாளர்களைப் பற்றி நாங்கள் நம்ப முடியாத அளவிற்கு பெருமைப்படுகிறோம். மேலும் ஐஐடிகள் மற்றும் அதற்கு அப்பால் அவர்களின் எதிர்கால முயற்சிகள் வெற்றி அடைய வாழ்த்துகிறோம்.

நிறுவனத்தின் மூத்த உதவி இயக்குனர் சஞ்சய் காந்தி, அதிகாரிகள் நவின்குமார் மற்றும் சக்தி கணேஷ் கூறுகையில், ஜெஇஇ அட்வான்ஸ்டு ஆண்டுதோறும் ஒரு ஐஐடி நடத்துகிறது.

JEE மெயின் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு IIT நாக்பூர் மற்றும் தேசிய தேர்வு நிறுவனம் யிணிணி அட்வான்ஸ்டு தேர்வை நடத்தின.

ஜெஇஇ மெயின் பல தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பிற மைய அரசின் உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கு என்றாலும், 23 இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் சேர்க்கைக்கு ஜெஇஇ அட்வான்ஸ்டு முன்நிபந்தனையாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், JEE அட்வான்ஸ்டு தேர்வில் பங்கேற்க மாணவர்கள் ஜெஇஇ மெயினில் தேர்வு எழுத வேண்டும். ஈரோடு ஆகாஷ் மையத்தில் பயிலும் 75 மாணவர்களில் 16 பேர் ஜெஇஇ தேர்விலும், 4 பேர் ஜெஇஇ அட்வான்ஸ் தேர்விலும் இந்த ஆண்டு தகுதி பெற்றனர்.
பொறியியல் கல்லூ ரிகளில் இருந்து ஆண்டுதோறும் வெளிவரும் 15 லட்சம் மாணவர்களில் 2 லட்சம் பேருக்கு உடனடியாக வேலை கிடைக்கிறது.

ஆனால், ஐஐடிகளில் இருந்து ஆண்டுதோறும் வெளிவரும் கிட்டத்தட்ட 40000 மாணவர்களும் வேலை பெறுகிறார்கள், மேலும் பலர் வெளிநாடுகளில் வேலை பெறுகிறார்கள். எங்கள் நிறுவனம் நாட்டில் 400 கிளைகளைக் கொண்டுள்ளது, என்றனர்.

படிக்க வேண்டும்

spot_img