தியாகி இம்மானுவேல் சேகரனின் 67 ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று தேனியில் அனுசரிக்கப்பட்டது இதற்காக தேனி பழைய பேருந்து நிலையத்தில் அவரது புகைப்படத்திற்கு பல்வேறு கட்சியினர் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர்
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் இமானுவேல் சேகரன் புகைப்படத்திற்கு மாலைகள் அணிவித்து வீர வணக்கம் என்ற கோஷங்களை எழுப்பி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், ஃபார்வர்ட் பிளாக் இந்து எழுச்சி முன்னணி உள்ளிட்ட காட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் அவரது புகைப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செய்தனர்
இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிக்கும்படி விடுத்த கோரிக்கையை மு.க ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். மேலும் அவருக்கு மூன்று கோடி செலவில் மணிமண்டபம் கட்டியுள்ளார் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்
மேலும் இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொண்ட தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியினர் அவரது குருபூஜை நிகழ்ச்சி அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.