fbpx
Homeபிற செய்திகள்மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக உதவி

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக உதவி

மழையால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு வழங்குவ தற்காக 15 டன் அரிசியை திமுக இளைஞரணி மாநில நிர்வாகி வழங்கினார்.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரண மாக பலத்த சேதம் ஏற்பட்டுள் ளது. ஏராளமான மக்கள் அரசின் சார்பில் அமைக் கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக் கப்பட்டுள்ளனர். மேலும் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்துள்ளவர்களுக்கு அரசு மட்டுமல்லாது தன்னார்வ அமைப்புகள், அரசியல் கட்சி யினர் உதவ முன்வர வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையடுத்து திமுக இளைஞரணி சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் வழங்கும் வகையில், சென்னைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக இளைஞரணி மாநில துணை செயலாளர் கே.இ. பிரகாஷ் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக 15 டன் கொண்ட 3000 அரிசி மூட்டைகளை நேற்று சென்னை அன்பகத்திற்கு அனுப்பி வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img