தருமபுரி மாவட்டம், தருமபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இலக்கியம்பட்டி செம்மாண்டகுப்பம் கே.நடுஅள்ளி ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை செய்தியாளர் பயணத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இச்செய்தியாளர் பயணத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது:
தருமபுரி ஊராட்சி ஒன்றியம், இலக்கியம்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் (2023-2024) கீழ் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகள், செம்மாண்டகுப்பம் ஊராட்சி, முத்துப்பட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8.20 லட்சம் மதிப்பீட்டில் சமத்துவ சுடுகாடு மேம்பாடு செய்தல் பணிகள், கே.நடுஅள்ளி ஊராட்சி, பாறைக்கொட்டாய் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் மாதம்மாள் என்பவர் நிலத்தில் மண் வரப்பு அமைக்கும் பணிகள், கே.நடுஅள்ளி ஊராட்சி, முனியப்பன் கோவில் கொட்டாய் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6.15 லட்சம் மதிப்பீட்டில் முனியப்பன் கோவில் கொட்டாய் தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள், முனியப்பன் கோவில் கொட்டாய் கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.27.25 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கும் பணிகள், கே.நடுஅள்ளி ஊராட்சி, எம்.சவுளுர் கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 லட்சம் வீதம் ரூ.7.00 லட்சம் மதிப்பீட்டில் 2 பயனாளிகளுக்கு கட்டப்பட்டு வரும் வீடு கட்டுமான பணிகள் என மொத்தம் ரூ.64.60 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செய்தியாளர் பயணத்தின்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இப்பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க அலுவலர்களுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வுகளின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைவாணி, சத்யா, உதவி பொறியாளர்கள் சீனிவாசன், விக்னேஸ்வரி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.