கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் துடியலூர், வி.சி.எஸ் நகர் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து பணியாளர்களிடம் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கொசு ஒழிப்பு பதிவேடுகளை ஆய்வு செய்து, அவர்களுக்கான அறிவுரைகளை வழங்கினார்.
உடன் மாமன்ற உறுப்பினர் சித்ரா, உதவி ஆணையாளர் மோகனசுந்தரி, உதவி பொறியாளர்கள் ஜெயன்ராஜ், குமரேசன், மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.