கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் சுந்தராபுரம், முருகன் நகரில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.
உடன் துணை மேயர் வெற்றிச்செல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, ஆளுங்கட்சித்தலைவர் கர்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் குணசேகரன், அஸ்லாம் பாஷா, உதவி ஆணையர் அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, உதவி பொறியாளர்கள் சுந்தர்ராஜன், சபரீஸ், சுகாதார ஆய்வாளர் ஆண்டியப்பன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



