கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண். 76க்குட்பட்ட பேரூர் சாலை ஆண்டிபாளையம் பாலம் அருகில் உக்கடத்திற்கு செல்லும் ராஜவாய்க்காலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, மாநகரப்பொறியாளர் முருகேசன், உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி பொறியாளர் ஏஞ்சலினா ஆகியோர் உள்ளனர்.



