கோவையில் சிறுபான்மையினர் தினத்தையொட்டி அம்மன் குளம் ஜெருசலேம் திருச்சபையில் மத நல்லிணக்க விழா, கிறிஸ்துமஸ் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பிஷப் சகாயராஜ் தலைமையில் நடந்தது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு மாநில உதவி தலைவர் பிஜு அலெக்ஸ் கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கி பேசினார்
விழாவில் பாஸ்டர் லியோ ஜெகநாத், வழக்கறிஞர் சாமுவேல் ரவீந்தர் மற்றும் சிறுபான்மையினர் கூட்டமைப்பு நிர்வாகிகள், ஜீவ சாந்தி அறக்கட்டளையின் நிர் வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் 50 பேருக்கு சேலைகள் மற்றும் பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன.