கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் சாய் நகரிலுள்ள சிறுவர் பூங்காவில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு பூங்காவை சுற்றி கம்பிவேலி அமைத்து, பராமரித்திடவும், அப்பகுதியில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கவும் சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.
உடன் மாமன்ற உறுப்பினர் சித்ரா தங்கவேல், உதவி ஆணையர் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் எழில், உதவி பொறியாளர் உத்தமன் ஆகியோர் உள்ளனர்.



