fbpx
Homeபிற செய்திகள்மருதமலை அடிவாரத்தில் ஆசியாவின் மிகப்பெரிய 184 அடி உயர முருகன் சிலை அமைக்கும் பணி விரைவில்...

மருதமலை அடிவாரத்தில் ஆசியாவின் மிகப்பெரிய 184 அடி உயர முருகன் சிலை அமைக்கும் பணி விரைவில் துவங்கும் – அமைச்சர் சேகர்பாபு தகவல்

மருதமலை சுப்பிர மணிய சுவாமி கோயில் அடிவாரத்தில் ஆசியாவி லேயே மிக உயரமாக 184 அடியில் முருகன் சிலை அமைக்கும் பணிக்கான நடவடிக்கைகள் வெகு விரைவில் மேற்கொள்ளப்படும் என இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழக முதல்வர் தலைமையிலான சீர்மிகு ஆட்சியில் திருக்கோயில்களுக்கு குட முழுக்குகள், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், அன்னதானக் கூடங்கள், தர்ப்பண மண்டபங்கள், பசுமட காப்பகங்கள் என அனைத்து பணிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டம், பேரூர், பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் குடமுழுக்கு மிகச்சிறப்பாக நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக இத்திருக்கோயிலில் தமிழ் நாட்டில் எங்கும் இல்லாத வகையில் ஒரே நேரத்தில் 50 நபர்கள் அமர்ந்து தர்ப்பணம் செய்கின்ற வகையில் ரூ.11.85 கோடி செலவில் மிகப்பெரிய அளவில் தர்ப்பண மண்டபம், சுகாதார வளாகம், காத்திருப்புக் கூடம், தகவல் மையம், படித் துறை சீரமைப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் போன்றவை திருக்கோயில் நிதி மற்றும் உபயதாரர் களால் அமைக் கப்பட்டுள்ளது.
மேலும், இத்திருக்கோயி லில் ரூ.55 லட்சம் செல வில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம், ரூ.51 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பசுமடம், ரூ.11 லட்சம் செலவில் அமைக்கப்பட் டுள்ள பணி யாளர்களுக்கான கழிப்பிட வசதி போன்றவை பயன் பாட்டிற்கு (நேற்று) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற இந்த நான்கு ஆண்டுகளில் 2,948 திருக் கோயில்களுக்கு குடமுழுக்கு நடை பெற் றுள்ளது.
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் அடிவாரத்தில் ஆசியாவி லேயே மிக உயரமாக 184 அடியில் முருகன் சிலை அமைக்க தமிழ்நாடு முதல்வர் அனுமதி அளித்துள்ளார். அந்த சிலை அமைக்கும் பணிக்கான இடத்தினையும், இந்தாண்டு சட்டமன்ற அறிவிப்பின்படி வடவள்ளி பகுதியில் புதிய பல் தொழில்நுட்ப கல்லூரி (பாலி டெக்னிக் கல்லூரி) அமைய வுள்ள இடத்தினையும் ஆய்வு செய் தோம். வெகுவிரைவில் முருகன் சிலை அமைக்கும் பணிக்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img