fbpx
Homeபிற செய்திகள்இராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் 217 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு

இராணிப்பேட்டையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் 217 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  நடைபெற்ற  மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் ஆட்சியர்  சந்திரகலா பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் குறைகளை கேட்டறிந்தார்.

 இக்கூட்டத்தில்  வருவாய்த்துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மைத்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த 217 மனுக்களை ஆட்சியர் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் மனுதாரர்களுக்கு வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்  சுரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர்  கலைவாணி, உதவி ஆணையர் கலால்  வரதராஜ், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img