கோவை மாநகராட்சி, பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக தீர்வுகாண உத்தரவிட்டார். உடன் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிசெல்வன், துணை ஆணையாளர்கள் சுல்தானா, குமரேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



