கடந்த நிதியாண்டில் 100 சதவீதம் கடன் வசூல் செய்த 45 கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வழங்கினர்.
தொடர்ந்து சென்னி மலை, நசியனூர், பி.பெ.அக்ரஹாரம், மொடக்குறிச்சி, ஊஞ்சலூர் கொளத்துப்பாளையம் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் காஞ்சிக் கோவில் தொடக்க வேளாண்மைகூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.50,000 வீதம் மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.கந்தராஜா, துணைப் பதி வாளர்கள் பா.ரவிச்சந்திரன், ரா.முத்துசிதம்பரம், பெ.பிரகாஷ், து.ரவிசந்திரன், ப.அஜித்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.