fbpx
Homeபிற செய்திகள்84 சாதனையாளர்களுக்கு விருது

84 சாதனையாளர்களுக்கு விருது

கோவை மக்கள் பொது நல சங்கம் நாலாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் சிறந்த சமூக சேவகர் இளம் தொழிலதிபர் சிறந்த சாதனையாளர்கள்.

சிறந்த காவலர், சிறந்த பத்திரிக்கையாளர் விருது வழங்கும் விழா மற்றும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா அவிநாசி ரோடு அண்ணா சிலை அருகே உள்ள ஆருத்ரா ஹாலில் நடைபெற்றது.

இந்த விழாவில் பந்தய சாலை காவல் ஆய்வாளர் அர்ஜுன் குமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் (கிழக்கு) பாண்டியராஜன், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலை மை இடத்து மருத்துவர் சரவண பிரியா, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (ஓய்வு) பாஸ்கரன், லயன் செந்தில் குமார், ஆடம் அப்பாதுரை (இயக்குனர் ,ஆஃப்டர் நூன் மற்றும் பிற்பகல் நாளிதழ்கள்), சூரியன் எப்எம் டைசன், சைன் மேக்கர்ஸ் ஃபை சல் அகமது, பிரசன்ன மணிகண்டன், நிழல் மையம் முருகன், கோவை மக்கள் பொது நல சங்கத்தின் கௌரவ அலோசகர் கனகராஜ், பால் ராசு (நிறுவனர், தாய்த்தமிழ் அகாடமி), கோவை மக்கள் பொது நல சங்க செயலாளர் பிரகாஷ் கண்ணன் உள்பட 84 சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

விழாவில் சிறந்த காவலர்கள், சிறந்த சமூக சேவகர்கள், இளம் தொழிலதிபர்கள், சிறந்த பத்திரிகையாளர்களுக்கு விரு துகள் வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து மாநகராட்சி பள்ளியில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர் 50க்கும் மேற் பட்டோர்க்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங் கப்பட்டது.
விழாவில்100 க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மக்கள் நல பொதுநல சங்கத்தின் நிர்வாகிகள் ஆனந்த குமார், பாலாஜி, தனபால், நவீன், ஜோதிஷ் குமார், செந்தில்குமார், கிருஷ்ண குமார், கண்ணன், ரஞ்சித் குமார் ஆகியோர் செய்திருந்தனர்
விழா முடிவில் மக்கள் நண்பன் ஆனந்த் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img