அம்ருதா விஸ்வ வித்யாபீடம் வால்வோ குரூப் இந்தியா பிரைவேட் லிமிடெட் உடனான கூட்டாண்மையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.
வளர்ந்து வரும் ஆட்டோமோட்டிவ் தொழிற்சாலையினைக் குறித்த திறன்களைப் பெற மாணவர்களுக்கு உதவுவது மட்டுமல்லாது இத்துறையில் அவர்கள் தொழில்முறை ரீதியான வெற்றியை அடைவதற்கு அவர்களைத் தயார்ப்படுத்துகின்றது. இந்த கூட்டாண்மை புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் மாணவர்களுக்கு தொழில் சார்ந்த அனுபவத்தை வழங்குவதற்காக, தொழில் துறையினில் அவர்களை நன்கு தயார்ப்படுத்துவதை இந்த முயற்சியானது உறுதி செய்கின்றது.
இந்த கூட்டாண்மையானது, இரண்டு முதல் நான்கு செமஸ்டர் கிரெடிட் அடிப்படையிலான திட்டத்தை துவங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள தொழில்நுட்பங்களை கற்பிப்பதில் அம்ருதாவின் ஆசிரியர்களுக்கு வால்வோ பயிற்சி அளிப்பதன் மூலம், அவர்களின் பொறியியல் சார்ந்த திறமைகளை வளர்த்துக்கொள்ள உதவுகின்றது.
இது குறித்து, அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் கல்வி மற்றும் தொழில் துறை கூட்டாண்மையின் இயக்குனர் சுரேஷ் கோடூர் கூறுகையில், “இக் கூட்டாண்மையானது, கல்விசார் சிறப்பை தொழில்துறை பொருத்தத்துடன் ஒருங்கிணைப்பதில் அம்ருதாவின் கண்ணோட்டத்தைப் பிரதிபலிக்கின்றது” என்றார்.
வால்வோ குரூப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் கமல் பாலி கூறுகையில், “இம்முயற்சியானது வாகனத் துறையில் புதுமை மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது”
என்றார்.