உலகப் புகழ்பெற்ற நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக எண்ணற்ற உயிர்களை காப்பாற்றி வரும் டாக்டர்.க.மாதேஸ்வரன், மருத்துவ சேவையைத் தாண்டி கோடிக்கணக்கான மரங்களை நட்டு தமிழகத்தின் பல்லுயிர் சூழலை பாதுகாக்க அயராது செயல்பட்டு வருகிறார். அவருடன் மனைவி ஸ்ரீகலாவும் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் இயற்கை நேசத்தையும், எதிர்கால தலைமுறைக ளுக்காக உருவாக்கிய பசுமைச் செல்வத்தையும் கௌரவிக்கும் விதமாக அவருக்கு ‘உயிர் சூழல் 2026’ நிகழ்வில் “உயிர் சூழல் விருது” வழங்கப்பட்டது. இந்த விருதை தேவராஜன் (URC), சுந்தர்ராஜன் (வனம் இந்தியா அறக்கட்டளை), உஷா தேவி வெங்கடாசலம் (ஜனனி ரீஜென்) ஆகியோர் இணைந்து வழங் கினர்.
ஒரு மருத்துவர் உயிர்களை காப்பார், ஒரு மரம் உலகையே காப்பாற்றும் என நிகழ்வில் தெரி வித்தனர்.



