தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருவதை தொடர்ந்து கோவை, பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல அலுவலர்கள், உதவி மண்டல அலுவலர்களுக்கு வாக்கு பதிவு இயந்திரங்களை கையாள்வது தொடர்பாக பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு) தலைமையில் நடத்தப்பட்டது.
இந்த பயிற்சி வகுப்பில் வாக்கு பதிவு இயந்திரங்களை கையாளும் முறைகள் தேர்தல் சமயத்தில் செய்யும் பணிகள் குறித்தும், தேர்தல் படிவங்கள் நிரப்புவது குறித்தும் பயிற்சி கொடுக்கப்பட்டது.



