fbpx
Homeபிற செய்திகள்கோவையில் 4-வது முறையாக ‘சாரங் 2026’ கோடைகால கைவினைக் கண்காட்சி- விற்பனை இன்று துவங்கியது

கோவையில் 4-வது முறையாக ‘சாரங் 2026’ கோடைகால கைவினைக் கண்காட்சி- விற்பனை இன்று துவங்கியது

தமிழ்நாடு கைவினைக் கழகத்தின் உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் கோடைகால 4-வது கைவி னைக் கண்காட்சி மற்றும் விற்பனை ‘சாரங்-2026’, இன்று ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கோவை நகரில் நடைபெறுகிறது.

திருச்சி சாலைக்கு அருகிலுள்ள சென்ட்ரல் ஸ்டூடியோ சாலையில் அமைந்துள்ள 77 டிகிரி ஈஸ்ட் வளாகத்தில் நடைபெ றும் இந்தக் கண்காட்சி மற்றும் விற்பனை, கோவை மக்களுக்கு தனித்துவமான ஷாப்பிங் அனுபவமாக அமையும் என ஏற்பாட்டா ளர்கள் தெரிவித்தனர். பல முன்னணி பிராண்டுகள் முதன் முறையாக கோவைக்கு வருவதால், பார்வை யாளர்களிடையே அதிக ஆர்வம் காணப்படு கிறது. 38 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான தமிழ்நாடு கைவினைக் கழகம், மாநி லம் முழுவதும் கைவினைப் பொருட்கள் மற்றும் கைவினைஞர்களின் மேம் பாட்டிற்காக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்பு, சென்னை இந்திய கைவி னைக் கழகத்துடன் இணைந்த தாகவும், அதன் மூலம் உலக கைவினைக் கழகத்துடனும் தொடர்புடையதாகவும் உள்ளது.

கிராஃப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு நடத்தும் பண்டிகைக் காலக் கண் காட்சியான ‘சிருஷ்டி’, 28 ஆண்டுகளுக்கு முன்பு கோவை நகரில் தொடங்கப் பட்டது. இது விற்பனை கண்காட்சிகளில் தனித்த இடத்தை பெற்றுள்ளது. தற்போது 4-வது பதிப் பாக நடைபெறும் ‘சாரங்’ கண்காட்சி கோடை காலத்திற்கு ஏற்ற எளிமை யான ஆடைகள் மற்றும் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலகுவான பண்டிகைக் கால ஆடைகளை மைய மாகக் கொண்டதாக அமைந்துள்ளது. கைத்தறி மற்றும் நெசவுத் தொழில் களில் ஈடுபடும் வடிவ மைப்பாளர்களுக்கு இந்தக் கண்காட்சியில் சிறப்பு முன்னுரிமை வழங்கப்பட் டுள்ளது.

கண்காட்சியில் ஜவுளி, புடவைகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக் கான ஆடைகள், மதிப்புமிக்க நகைகள், பட்டுத் துணிகள், வீட்டு அலங்காரப் பொருட்கள் உள்ளிட்டவை ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.
இந்த ஆண்டு 32 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், நகரின் பிரபல உணவகங்களின் கீழ் இயங்கும் லிட்டில் சோய், ரசனை, பெட்டிட் டூ ஆகியவற்றின் சிறப்பு உணவு மற்றும் பானங்கள் பார்வையாளர்களுக்கு கூடுதல் ஈர்ப்பாக இருக்கும்.

‘சாரங்’ மற்றும் ‘சிருஷ்டி’ ஆகிய இரு கண்காட்சிகளும் சிசிடிஎன் அமைப்பின் நிதி திரட்டும் முக்கிய நிகழ்வுகளாகும். இதன் மூலம் பெறப்படும் வருமானம், ஆண்டு முழுவதும் அமைப்பின் செயல்பாடுகளுக்கும், குறிப்பாக கோவை நகரில் நடைபெறும் வருடாந்திர கைவினைக் கண்காட்சியில் பங்கேற்கும் கைவினைஞர்களுக்கான செலவுகளை மானியமாக வழங்கவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்தக் கண்காட்சி, இந்தியா முழுவதிலிருந்தும் வரும் கைவினைஞர்களுக்கு தங்கள் கைவினைத்திறனை வெளிப்படுத்தவும், நேரடியாக விற்பனை செய்யவும் ஒரு சிறந்த தளமாக விளங்குகிறது. காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img