fbpx
Homeபிற செய்திகள்ராணிப்பேட்டையில் 70 சிறு வியாபாரிகளுக்கு நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகள்: அமைச்சர் ஆர். காந்தி வழங்கினார்

ராணிப்பேட்டையில் 70 சிறு வியாபாரிகளுக்கு நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகள்: அமைச்சர் ஆர். காந்தி வழங்கினார்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தேசிய தோட்டக் கலை இயக்கம் 2025-26 ஆம் ஆண்டின் கீழ் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில்
ரூ.21 லட்சம் மதிப் பீட்டிலான 50% மானியத்துடன் கூடிய 70 நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது.

இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்துக்கொண்டு பயனா ளிகளுக்கு வண்டிகளை வழங்கி பேசியதாவது:- இந்த திட்டத்தின் மூலம் சிறு வியாபாரிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்கும், பசுமையான காய்கறிகள் நேரடியாகவும் குறைந்த விலையிலும் மக்களுக்கு கிடைக்கும். உள்ளூர் விவசாயிகளின் உற்பத்தி வீணாகாமல், சந்தைக்கு எளிதில் சென்றடையும்.

நகர்ப் புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் சுகாதாரமான உணவு பழக்கத்தை ஊக்குவிக்கும்.

இந்த திட்டம், சிறு வியாபாரிகள் தங்களின் விற்பனை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதில் பெரும் பங்காற்றும்.

இன்று நடமாடும் வண் டிகள் பெறும் பயனாளிகள் அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நலத் திட்டங்களை பயன்படுத்தி தங்கள் குடும்ப வருமானத்தை உயர்த்திக் கொள்ளுமாறும், நடமாடும் விற்பனை வண்டிகள் மூலம் காய்கறிகளை பொது மக்கள் வீடு தோறும் எளிதில் கொண்டு சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்குமாறும், மேலும், உள்ளூர் விவசாயிகள் உற்பத்திக்கு விரைவான சந்தை வாய்ப்புகளை உருவாக்குமாறும் பயனாளிகளிடம் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, தோட்டக்கலை துணை இயக்குநர் சிந்தியா, அரசு அலுவலர்கள், பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img