தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்காக இந்தியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட தாய்ப்பால் ஊட்டும் அறைகளை நிறுவியதாக ஹிமாலயா பேபிகேர் நிறுவனம் அறிவித்துள்ளது.
தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு கவுரவமாகவும், வசதியாகவும் தாய்ப்பால் ஊட்ட தூய்மையான மற்றும் தனிப்பட்ட இடங்களை ஹிமாலயா பேபிகேர் அமைத்துக் கொடுத்துள்ளது.
மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் கோவா போன்ற முக்கிய போக்குவரத்து நகரங்கள் உட்பட 27 விமான நிலையங்களிலும் தாய்ப்பால் கொடுக்கும் அறைகளை இந்த நிறுவனம் அமைத்துள்ளது.
தமிழ்நாட்டில், மதுரை மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையங்களில் இந்த வசதிகள் நிறுவப்பட்டுள்ளன.
உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் மத்தியபிரதேசம் முழுவதும் 33 ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளன.
கூடுதலாக, இந்தியாவில் உள்ள பெருநகரங்கள் மற்றும் பிராந்திய மையங்களில் 141 மருத்துவமனைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் 268 பாலூட்டும் அறைகளை ஹிமாலயா பேபி கேர் நிறுவனம் அமைத்துக் கொடுத்துள்ளது.



