மாற்றுத் திறனாளி களுக்கான உதவித் திட்டங்களில் முன்னணி வகிக்கும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர், ”வாக் அகேன்” என்ற ரோட்டரி இன்டர்நேஷனல் கிளோபல் கிராண்ட் திட்டம் மூலம், இயலாமை யை எதிர்கொள் பவர்க ளுக்கு நடக்க வைக்கும் நம்பிக்கையை வழங்கி வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ், கோவை மற்றும் கேரளா மாநிலங்களில் மொத்தம் 500 செயற்கை கால்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. கோவையில் கடந்த ஒரு மாதத்தில் மூன்று முகாம்கள் நடத்தப்பட்டு, 105 நபர்களுக்கு அளவீடு செய்யப்பட்டது. இந்நிலை யில், 30 செயற்கை கால்கள் ஏற்கனவே வழங்கப் பட்டுள்ளன. மீதமுள்ள கால்கள் ஒரு மாதத்துக்குள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் மூன்றாவது முகாம், கடந்த 8ம் தேதி எஸ்எஸ்விஎம் ஸ்கூல் ஆப் எக்ஸலென்ஸ்-ல் நடைபெற்றது.
நிகழ்வின் முக்கிய விருந்தினராக தெற்கு மேற்கு படைப்பிரிவின் தலைமை அதிகாரியும் மெட்ராஸ் ரெஜிமென்டின் கர்னலுமான லெப்டினன்ட் ஜெனரல் மஞ்சிந்தர் சிங் கலந்து கொண்டார். தன்னுடைய உரையில், போரில் கால்கள் இழந்த தன்னுடைய படை வீரர்களின் அனுபவங்களை பகிர்ந்து, இந்த திட்டம் போன்று நல்வாழ்வை வழிவகுக்கும் முயற்சிகள் மிகவும் அவசியமானவை என்றார். மாவட்ட கவர்னர் (எலெக்ட்) ரோட்டேரியன் செல்லா ராகவேந்திரா மற்றும் மாவட்ட கவர்னர் நாமினி ரோட்டேரியன் மாருதி ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டு திட்டத்தின் சிறப்பை பாராட்டினர்.
நிகழ்விற்கு ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் தலைவர் ரோட்டேரியன் ஏ. ராம்குமார் தலைமை வகித்தார். இந்த கிளோபல் கிராண்ட் திட்டத்தின் திட்டத் தலைவர் ரோட்டே ரியன் கர்னல் என்.பி.ஆர். நாயர் ஆவார். கோவையில் செயற்கை கால்கள் வழங்கும் திட்டத்திற்கான திட்டத் தலைவராக ரோட்டேரியன் குர்ப்ரீத் சிங் பணியாற்றி வருகிறார்.
இந்த வகை சேவை திட்டங்கள், மாற்றுத்திற னாளிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றுவதாக அமைந்துள்ளது பாராட்ட த்தக்கது.