Homeபிற செய்திகள்வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட புதுச்சேரிக்கு தன்னார்வலர்கள் நிவாரணம்

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட புதுச்சேரிக்கு தன்னார்வலர்கள் நிவாரணம்

பெங்கால் சூறாவளி மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் புதுச்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், பழங்குடியினர் குடியிருப்புகள் மற்றும் பலர்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலவீனமான வீட்டு கட்டமைப்புகள் வாழ்வாதாரத்தை சீர்குலைத்தது.

இந்நிலையில் மீட்புக்கு உதவுவதற்கும் அத்தியாவசிய ஆதரவை வழங்குவதற்கும், ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் லேடீஸ் சர்க்கிள் இந்தியா ஆகியவை பெங்களூரை தளமாகக் கொண்ட கார்ப்பரேட் ஈக்வினிட்டி இந்தியா உடன் இணைந்து பஹூர் தாலுகாவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகித்தன. இதனால் 2000 குடும்பங்கள் பயன் பெற்றுள்ளது.

இதில் ரவுண்ட் டேபிள் இந்தியாவைச் சேர்ந்த உறுப்பினர்கள், நிவாரண நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்றனர். 

பஹூர் தாலுகாவில் ரேஷன் விநியோகம் தவிர, கணிசமான இழப்புகள் பதிவாகிய காரைக்காலிலும் அணிகள் ஆதரவு அளித்தன. 

இது குறித்து ரவுண்ட் டேபிள் வெங்கடரமணி பேசுகையில், 

“தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகங்களுக்கு, தங்கள் வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களை மறுகட்டமைக்க உதவுகிறோம்” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img