fbpx
Homeபிற செய்திகள்கோவை கல்வியாளர்களுக்கு பர்லிங்டன் இங்கிலிஷ் பயிற்சி

கோவை கல்வியாளர்களுக்கு பர்லிங்டன் இங்கிலிஷ் பயிற்சி

கோவையில் உள்ள கல்வி யாளர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களுக்கு ஒரு தனித்து வமான வாய்ப்பை வழங்க, பர்லிங்டன் இங்கிலிஷ்&ல், 21 ஆம் நூற்றாண்டு கல்வியாளர் ஈடுபாடு திட்டம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.

அவர்கள் தலைமைத்துவ திறன்களுடன் மேம்படுத்தவும், தேசியபாடத் திட்ட கட்டமைப்புகளின் மற்றும் மற்றும் தேசிய கல்விக் கொள்கை -2020 பரிந்துரைகளுக்கு ஏற்ப ஆங்கில மொழி கற்பித்தல்-கற்றல் நிலைகளை உயர்த்தவும்.

15 நகரங்களில் நடத்தப்படும் இந்த திட்டங்களில் கல்வியாளர்களின் திறன் மற்றும் அறிவை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் நாடு முழுவதும் 50,000 கல்வியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த ஒரு நாள் நிகழ்ச்சியானது கோவை ஜோன்பைதி பார்க்கில் நடைபெற்றது. இதில் மொழியியல் ஆளுமை, மொழி வளர்ச்சி நுண்ணறிவு மற்றும் திறன்களுக்கான தொழிநுட்ப ஒருங்கிணைப்பு போன்ற முக்கிய தலைப்புகள் நடத்தப்பட்டன.

இதில் மொழியியல் நம்பிக்கை, மொழிவளர்ச்சி நுண்ணறிவு மற்றும் திறன்களுக்கான தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு போன்ற முக்கியமான தலைப்பு களில் கல்பேஷ்அமின், தலைவர் – கற்பித்தல் மற்றும் பயிற்சி, பர்லிங்டன் இங்கிலிஷ் எடுத்துரைத்தார்.

அமித்பவேஜா, (நிர்வாக இயக்குனர், பர்லிங்டன் இங் கிலிஷ்) ‘21ஆம் நூற்றாண்டு கல்வியாளர் ஈடுபாடு திட்டம்‘ கல்வித் திறனை வளர்ப்பதில் பர்லிங்டன் ஆங்கிலத்தின் உறு திப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இத்திட்டம் நாடு முழுவதும் விரிவடைந்து வரும் நிலையில், பர்லிங்டன் இங்கிலிஷ் 50000 க்கும் மேற்பட்ட கல்வியாளர்களை மேம்படுத்துவதற்கும், கல்வி முறையை மேம்படுத்துவதற்காக தன்னை அர்ப்பணித்துள்ளது.

21ஆம் நூற்றாண்டின் சவால்கள் மற்றும் வாய்ப்புகளுக்கு மாண வர்களைத் தயார்படுத்தும் தர மான கல்வியை வழங்குவதற்கு நாடு முழுவதும் உள்ள கல்வி யாளர்களின் தொழில்முறை மேம்பாட்டில் முதலீடு செய்வது முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம், என்றார்.

கல்பேஷ்அமின் கூறுகையில், “வளர்ந்து வரும் கல்வி தளத்தில், மாணவர்களின் விரி வான திறன் மேம்பாட்டை வளர்க்கும் திறன்களுடன் கல்வியாளர்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்வதும், அவற்றைத் தயார்படுத்துவதும் மிகமுக்கியமானது.

பர்லிங்டன் இங்கிலிஷ்வுடன் இணைந்து கல்வியாளர்கள் பங்கு பெரும் அமர்வுகளில் தேசிய மற்றும் உலகளாவிய பிரச்சனைகளை நீண்டகால கண்ணோட்டத் துடன் கையாள்வது காலத்தின் தேவையாகும்.

இந்த முன்முயற்சியின் ஒரு பகுதி யாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் கல்வியாளர்களால் அமர்வுக்கு நேர்மறை வரவேற்பு அதன் முக்கியத்துவத்தை அடிக் கோடிட்டுக் காட்டுகிறது.

கோவையில் கல்வியாளர்களை ஊக்கப்படுத்துவது இது ஒரு தொடக்கம் எனலாம். பர்லிங்டன் இங்கிலிஷ், ‘21வது நூற்றாண்டு கல்வியாளர் ஈடுபாட்டு திட்டத்துடன்’ நாடு முழுவதும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்த உறுதி பூண்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img