கோவை எலைட் அரிமா சங்கம் புதிய தலைவராக வழக்கறிஞர் ஏ.ராஜேஷ்கண்ணா, செயலாளராக சதீஷ்குமார், பொருளாளராக சி. ஏ.கிரிதரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் கோவை ராம்நகரில் உள்ள ஹெரிடேஜ் இன் ஒட்டலில் நடைபெற்ற விழாவில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்த விழாவில் எலைட் அரிமாசங்க மாவட்ட ஆளுனர் ஜான் பீட்டர், முன்னாள் ஆளுனர்கள் அழகு ஜெயபால், பி.கே.ஆறுமுகம், ரவிச்சந்திரன், பாலகிருஷ்ணன், வின்சென்ட் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.



