‘உறுப்பினர் எண்ணிக்கையில் சாதனை படைத்ததற்காகவும், ஏஐஎஃப்டிபி- வளர்ச்சிக்கு ஆதரவளித்தத ற்காகவும்‘ தஞ்சாவூரைச் சேர்ந்த ஆடிட்டர் ஆர்.ரவிச்சந்திரனுக்கு அகில இந்திய வரிப் பயிற்சியாளர்கள் கூட்டமைப்பு (ஏஐஎஃப்டிபி) தேசியத் தலைவர் மல்லாடி சீனிவாச ராவ் தேசிய விருதை வழங்கினார்.
இதேபோல ஏஐஎஃப்டிபி 45 வது நிறுவன தின விழாவில் ஏஐஎஃப்டிபி தென் மண்டலத் தலைவர் வழக்கறிஞர் எம்.கணேசனும் அவருக்கு சிறந்த ஒருங்கிணைப்பாளர் விருதை வழங்கினார்.
கணேசன் தனது பாராட்டுரையில் ‘எங்கள் மெய்நிகர் தேசிய வரி மாநாட்டுடன் தொடர்புடைய மெய்நிகர் கலாச்சார இரவு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கும், அதிக உறுப்பினர்களைப் பெறுவதற்கும் நீங்கள் எடுத்த அயராத முயற்சிகளுக்காக இந்த விருது உங்களுக்கு வழங்கப்படுகிறது.
மேலும் பல கருத்தரங்குகளை நடத்தி வரி நிபுணர்களின் தரத்தை உயர்த்துவதற்கான உங்கள் கடின உழைப்பை நான் பாராட்டுகிறேன், மேலும் வரி நிபுணர்களின் சுமையை குறைக்க அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் தலையிட நீங்கள் மிகவும் முயற்சித்தீர்கள்` என்று குறிப்பிட்டுள்ளார்.



