நீலகிரி மாவட்டம், கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்திய மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான இளைஞர்களுக்கு வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் ஜாகீர் உசேன், கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் சரவண கண்ணன், கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.



