கோவை மாநகர் மேற்கு மாவட்டம், சாய்பா பாகாலனி பகுதி தி.மு.க. சார்பாக ஒண்றிணைவோம் வா திட்டத்தில் அந்த பகுதி பொதுமக்களுக்கு அரிசி மற்றும் மளிகை தொகுப்புகள் வழங்கப்பட்டது.
கொரோனா கால பேரிடர் காலத்தில் போதிய வருமானம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு ஒண்றிணைவோம் வா எனும் திட்டத்தில் உதவி செய்ய வேண்டும் என தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் அவரது ஆணைப்படி, கோவை தி.மு.க மாநகர் மேற்கு மாவட்டம், வடக்கு சட்டமன்ற தொகுதி, சாய்பாபாகாலனி பகுதி தி.மு.க. சார்பாக 11 வது வட்டம் கே.கே.புதூர் பகுதியில் பொதுமக்களுக்கு இலவச அரிசி மற்றும் சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அடங்கிய மளிகை தொகுப்புகள் வழங்கும் விழா நடைபெற்றது.
கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்ற இதில் சாய்பாபாகாலனி பகுதி பொறுப்பாளர் கே.எம்.ரவி தலைமை தாங்கினார்.
கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பையா ஆர்.கிருஷ்ணன் மற்றும் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தி.மு.க. கொடியேற்றி விழாவை துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு அரிசி மற்றும் மளிகை தொகுப்புகளை வழங்கினர்.
இதில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் நந்தகுமார், பகுதி, பொறுப்பு குழு, வட்டக்கழகம், கிளை நிர்வாகிகள் நடராஜன், சுக்குருல்லா பாபு, கண்ணன், வினோத், தனபால், அமீன், சிராஜுதீன், பத்மநாபன், ஆறுமுகம், ஜே.பி.கண்ணன், ஹரீஷ், பாதல், இசாக், நஸ்ருதீன், வதம்பை சீனி, வரதராஜ், பைசல், பாபு, சேக் முகம்மது மற்றும் வட்டபிரதிநிதிகள் செல்லையன், அருணாச்சலம், ஷ்யாம், சுப்ரமணியம், குமரேசன் உட்பட மகளிர் அணி உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



