fbpx
Homeபிற செய்திகள்51 வயது தையல் தொழிலாளி 8 பேருக்கு மறுவாழ்வு அளித்தார்

51 வயது தையல் தொழிலாளி 8 பேருக்கு மறுவாழ்வு அளித்தார்

கோவை:
கோவை சிங்காநல்லூர் பகுதியில் மனைவி அம்பிகா, மகன் ஓமிஷ், மகள் காயத்திரி ஆகியோ ருடன் வசித்து வந்தவர் ஆர்.செந்தாமரை (51). இவர் கடந்த 6 ம் தேதி காலை 8.30 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் சிவசத்தி நகர் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார்.


உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு. பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை, அவிநாசி ரோடு கே.எம்.சி.ஹெச் மருத்து வமனையில் அனுமதித்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்பட வில்லை.


இந்த நிலையில் கடந்த 8ம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது மனைவி அம்பிகா, மகன் ஓமிஷ் மகள் காயத்திரி ஆகியோர் செந் தாமரையின் உடல் உறுப் புகளை தானம் செய்ய முன்வந்தனர்.


தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதி யுடன் அவரது இருதயம், கல்லீரல் சிறுநீரகங்கள், கண்கள், தோல் மற்றும் எலும்பு, ஆகியவை தானமாக பெறப்பட்டது. கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இருதயம் சென்னையில் உள்ள தனியார் மருத் துவமனைக்கும், கண்கள், தோல் மற்றும் எலும்பு ஆகியவை கோவையில் உள்ள தனியார் மருத்துவம னைக்கும், வழங்கப்பட் டது.


கே.எம்.சி.ஹெச் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு தகுந்த நேரத்தில் மிகவும் திறம்பட செயல்பட்டு உறுப்புகளை அனுப்பிவைத்தனர்.


இது குறித்து கே.எம்.சி.ஹெச். மருத்துவ மனை நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண் என் பழனிசாமி கூறியதாவது: மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பல ரது உயிரைக் காப்பாற்ற உதவும்.

பின்னர் உடல் உறுப்பு தானம் வழங்கிய திரு.ஸி.செந்தாமரை குடும் பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img