கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராம கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூகப்பணியியல் துறை மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் ஆகியவற்றுடன், சில்கால் பவுண்டேஷன் இணைந்து, நகர்புற இயற்கை சாகுபடி கிளப் மற்றும் ரத்ததான கிளப் ஆகிய, 2 புதிய கிளப்புகள் தொடக்க விழா, கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
இதில் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். சமூகப்பணியியல் துறைத்தலைவர் ஆர்.பிரியதஷர்ஷினி வரவேற்று பேசினார். சில்கால் பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் எஸ்.சத்தியநாராயணன், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, 2 புதிய கிளப்புகளைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “பொதுமக்கள் இயற்கைப் பொருட்களை உற்பத்தி செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், ரத்ததானம் செய்வதன் மூலம் அவசரக்காலக் கட்டங்களில் பொதுமக்களுக்கு உதவி செய்வது ஆகியவை கிளப்புகள் தொடங்குவதற்கான நோக்கம் ஆகும்” என்றார்.
இவ்விழாவில் காக்னிசென்ட் டெக்னாலஜி இயக்குநர் செந்தில், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பிரகதீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.