விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட குடும்ப நலச் செயலகம் மூலம் 29.11.2021 முதல் 04.12.2021 வரை அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெறுவதை முன்னிட்டு, விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார்



