fbpx
Homeபிற செய்திகள்முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: ரூ.39 கோடியில் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: ரூ.39 கோடியில் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் நினைவிடம் அமைக்கப்ப டும் என்று பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல் முறையாக சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிட வளாகத்தில், கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ரூ.39 கோடி செலவில், 2.23 ஏக்கரில் நினைவிடம் அமைக்கப்படும்.

கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களுடன் நினைவிடம் கட்டப்பட உள்ளது. தமிழகத்தின் முன் னேற்றத்தில் பெரும்பங்கு வகித்த கருணாநிதிக்கு சென்னையில் நினைவிடம் கட்டப்படும்.

கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் நிரந்தர தலைப்புச் செய்தியாக இருந்தவர் கருணாநிதி. 70 ஆண்டுகளாக பத்திரி கையாளராக இருந்தவர். போட்டியிட்ட தேர்தலில் எல்லாம் வென்றவர். தோல்வி அவரைத் தொட்டதே இல்லை, வெற்றி அவரைக் கைவிட்ட தேயில்லை. தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர்.

கல்வி, சமூக பொருளாதாரத்தில் தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு சென்றவர். இந்திய அரசி யலை வழிநடத்திய ஞானி.

80 ஆண்டு கால பொது வாழ்க்கையில் 60 ஆண்டு காலம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். 5 முறை முதல்வராக இருந்தவர் கருணாநிதி, 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், சென் னைக்கு மெட்ரோ திட்டம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு, சென்னையில் வள்ளுவர் கோட்டம், குமரியில் 133 அடியில் திருவள்ளுவருக்கு சிலை, கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், தெற்காசியாவிலேயே மிகப்பெரிய அண்ணா நூலகம், நுழைவுத் தேர்வு ரத்து, மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணச் சீட்டு உள்ளிட்ட நவீன தமிழகத்தை உருவாக்கிய சிற்பிதான் கருணாநிதி.

நாட்டில் கருணாநிதி போல ஒரு அரசியல் தலைவர் இருந்ததே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கருணாநிதி நினைவிட அறிவிப்புக்கு புகழாரம் சூட்டிய ஓ.பி.எஸ்.
கலைஞர் நினைவிடம் அமைக்கப்படுவதற்கு அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக எதிர்க்கட்சி துணைத்தலை வர் ஓ.பன்னீர் செல்வம் பாராட்டு தெரிவித்தார்.

இது குறித்து அவர் பேசுகையில், “ எனது தந்தை கலைஞரின் தீவிர பக்தர். அவரது பெட்டியில் எப்போதும் பராசக்தி திரைப்படத்தின் வசனப்புத்தகம் இருக்கும். கலைஞருக்கு நினைவிடம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை வரவேற்கி றேன்.

கலைஞரின் அனைத்து சிறப்பு அம்சமும் நினைவிடத்தில் இடம்பெற வேண்டும் என்ற கோரிக் கையையும் நான் வைக் கிறேன். வரலாற்றில் அவரது பெயர் என்றும் நிலைத்து நிற்கும் “ என்று தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img