உதகை வட்டாரம் நஞ்சநாடு கிராமத்தில் தோட் டக்கலை துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், கலைஞரின் அனைத்து கிராம வே ளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், மண் வள பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
உதகை மண் வள ஆய்வக கூட வேளாண்மை அலுவலர், சாயிநாத் கலந்துகொண்டு மண் மாதிரி எடுத்தல், மண் பரிசோதனை செய்வதில் அவசியம் பற்றி விளக்கம் அளித்தார்.
மண் பரிசோதனை மற்றும் நீர் பரிசோதனைக்கு விவசாயிகளுக்கு தலா ரூ.20 மட்டுமே வசூலிக்கப் படுகிறது. இதுபோன்ற திட்டங்களை விவசாயிகள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எடுத்துரைத்தார்.
இந்த முகாமில், உதகை தோட்டக்கலை அலுவலர் தொல்காப்பியன், உதவி தோட்டக்கலை அலுவலர், ராஜாரங்கீவ்கான் மற்றும் மண் ஆய்வுக்கூட உதவி வேளாண்மை அலுவலர், கிருபா ராணி ஆகியோர் கலந்துகொண்டனர்.



