கோவை காருண்யா நகரில் உள்ள பெதஸ்தா பிரார்த்தனை மையத்தில் சிறப்பு ஆசீர்வாத பிரார்த்தனை கூட்டம் நேற்று (ஏப்.10) நடந்தது. இதில் யேசு அழைக்கிறார் நிறுவனரும் காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் பால் தினகரன் அருளுரை வழங்கி சிறப்பு பிரார்த்தனை செய்தார். இக்கூட்டத்தில் இவாஞ்சலின் பால் தினகரன், சாமுவேல் பால் தினகரன், டாக்டர் ஷில்பா சாமுவேல், ஸ்டெல்லா ரமோலா மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.



